Wednesday 4 March 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - எப்போதும் காலவரையறை(Term) காப்பீட்டுத் திட்டத்தை மட்டும் வாங்குங்கள்

காப்பீட்டு திட்டம் என்பது சிக்கனமாக வாழும் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் கண்டிப்பாக வாங்கி இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்கும் குடும்பத் தலைவரை நம்பி, அவரது குடும்பத்தின் எதிர்காலம் உள்ளது. எல்லாம் நல்லபடியாக நடக்கும் எனினும், ஏதேனும் அசம்பாவிதத்திற்காக காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராகினால், மன நிம்மதி இருக்கும். ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை விடவும், குறிப்பிட்ட காலவரையறை(Term) காப்பீட்டுத் திட்டம் சிறந்தது. காலவரையறை காப்பீட்டுத் திட்டத்திற்கான காப்பீட்டு விகிதாச்சாரம் (Premium) ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை விட, குறைவாக இருக்கும். குறைவான பணம் காப்பீட்டுக்கு சென்றால், மிஞ்சும் பணத்தை குடும்பத் தலைவர் சேமித்து, நல்ல விதமாக முதலீடு செய்ய முடியும். கடவுள் அருளினால், காப்பீட்டுத் திட்டத்தை உபயோகப் படுத்தும் சந்தர்ப்பம் நிகழாதிருப்பினும், இழந்த தொகை மிகக் குறைவாக இருக்கும. சேமித்த தொகை, முதலீடு செய்யப்பட்டிருப்பின், முதலீட்டின் வளர்ச்சி ஓய்வு காலத்தில் உதவும். இதை சொல்வதற்கு, கடவுள் மன்னிக்கட்டும். ஏதேனும் அசம்பாவிதம் குடும்பத் தலைவருக்கு நிகழுமானால், குறைந்த விகிதாச்சாரத் தொகைக்கு(Premium) கூட,  கிடைக்கும் தொகை கணிசமாக இருக்கும். குடும்பத்தை பணமுடையிலிருந்து காக்கும். ஒவ்வொரு குடும்பத் தலைவரும், ஆண்டு வருமானத்தைப் போல, 5 முதல் 10 மடங்கு வரை, காப்பீடு செய்வது நல்லது.

No comments:

Post a Comment