Sunday 8 March 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - எறும்பு வெட்டுக்கிளி ஈசாப் கதையிலிருந்து, ஓய்வு காலத்திற்கான சேமிப்பின் அவசியத்தை உணருங்கள்

நாம் எல்லோரும் ஈசாப் கதைகளை அறிந்துள்ளோம். அவற்றில், 'எறும்பு மற்றும் வெட்டுக்களி' கதை மிகவும் பிரபலம். அந்தக் கதையாவது, வெயில் காலத்தில், எறும்பு கடினமாக உழைத்து, திட்டமிட்டு, குளிர்காலத்திற்கான தானியங்களை சேமித்து வைக்கத் தொடங்கும். ஆனால், வெட்டுக்கிளியோ, குளிர்காலத்திற்கு திட்டமிடாமல், கேளிக்கைகளில் பொழுதை செலவழித்துக் கொண்டிருக்கும். வெட்டுக்கிளி எறும்பிடம் 'குளிர்காலத்திற்கு நேரம் அதிகமாக உள்ளது. இப்போதைக்கு தேவையான தானியங்கள் உள்ளன. ஏன் குளிர்காலத்தைப் பற்றிக் கவலைப் படுகிறாய்? ' என்று ஏளனம் செய்யும். வெயில் காலம் முடிந்து, குளிர்காலம் வரும். குளிர்காலத்தில், எறும்பு உணவைப் பற்றிக் கவலைப்படாமல், சேமித்த தானியங்களைக் கொண்டு, தன்னுடைய பசியைத் தீர்த்துக் கொள்ளும். ஆனால், வெட்டுக்கிளியோ, தானியங்கள் சேமிக்காத்தால், பசியால் வாடி உயிர் துறக்கும்.

இதைப்போலத்தான், நாம் எறும்பைப் போல், நம்முடைய பணம் ஈட்டும் காலத்தில்(வாழ்வின் வெயில் காலம்), ஓய்வு காலத்திற்கான(வாழ்வின் குளிர்காலம்), போதிய சேமிப்பை சேர்க்க வேண்டும். அவ்வாறு, நாம் திட்டமிட்டு, நம்முடைய ஓய்வு காலத்திற்கு பணம் சேமித்திருந்தால், நாம் யாரையும் கையேந்தாமல், சேமித்த பணத்தைக் கொண்டு, நமது தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ளலாம். இல்லையெனில், எதிர்காலத்திற்கு திட்டமிடாத வெட்டுக்கிளியைப் போல், திண்டாட நேரிடும்.

2 comments: