Tuesday 3 March 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - ஆசைப்பட்டு வாங்கும் பொருட்களுக்கு 'அறிமுகமில்லாத மனிதர்' விதியைப் பயன்படுத்துங்கள்

ஏதேனும் பொருளை திடீரென ஆசைப்பட்டு வாங்க நினைத்தால், 'அறிமுகமில்லாத மனிதர் விதி'யைப் பயன்படுத்துங்கள். அதாவது, நீங்கள் ஆசைப்பட்ட பொருளுக்கான பண மதிப்பை அல்லது ஆசைப்பட்ட பொருளை அறிமுகமில்லாத நபர், உங்களுக்கு பரிசாக அளிக்க முன்வந்தால், நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த பொருளின் பண மதிப்பை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்களானால், அந்த ஆசைப்பட்ட பொருளை வாங்காதீர்கள். அந்தப் பொருளை நீங்கள் தேர்ந்தெடுத்தால், அந்தப் பொருள் உங்களுக்கு அவசியம் என்று அர்த்தம். உதாரணமாக, நீங்கள் ஒரு புதிய விலையுயர்ந்த கைபேசி வாங்க எண்ணுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த விலையுயர்ந்த கைபேசி மதிப்பு 50,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அறிமுகமில்லாத நபர், 50,000 ரூபாய் அல்லது விலையுயர்ந்த கைபேசி இரண்டையும் இரு கைககளில் ஏந்தி, இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும், நீங்கள் பரிசாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினால், நீங்கள் 50,000 ரூபாய் எடுத்துக் கொள்வீர்களா, கைபேசியை எடுத்துக் கொள்வீர்களா என்று யோசனை செய்யுங்கள். இந்த விதி, உங்களுக்கு பணத்தின் மதிப்பை தெரியப்படுத்தும். மேலும், தேவைகளுக்கும், தேவையற்ற ஆசைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரியப்படுத்தும். வீண் செலவைத் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment