Tuesday 18 December 2012

சிக்கன சிந்தனை 6: உங்களின் காபி விளைவு(Latte Effect) என்ன?!

நாம் எவ்வளவோ செயல் விளைவுகளைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். நமது நாட்டு விஞ்ஞானி C.V.ராமன் அவர்கள் கண்டுபிடிப்பை 'ராமன் விளைவு' என்று கூறுவோம். அது என்ன 'காபி விளைவு'?! இது தனிமனித நிதியின்(Personal Finance) ஒரு கோட்பாடு. இதைக் கண்டுப்பிடித்தவர் பெயர் டேவிட் பேக்(David Bach).

டேவிட் பேக் தனிமனித நிதி மற்றும் சிக்கன வாழ்க்கை முறையின் ஒரு ஆலோசகர். அவர் தனிமனித நிதி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு பெண்மணியின் காபி பிரியத்தினால் செலவாகும் கணக்கை போட்ட போது, வகுப்பில் உள்ள எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் அமெரிக்கப் பெண்மணி 'ஸ்டார் பக்ஸ்' காபி(Starbucks) மற்றும் பன்னை விரும்பி தினமும் உண்டு வருபவர். ஒரு நாளைக்கு அவருக்கு செலவாகும் காபிக் கணக்கை 30 ஆல் பெருக்கிய போது, அது மிகப் பெரிய செலவாக மாத இறுதியில் தோன்றியது. அதாவது, சிறிய அளவில் தெரியும் ஒரு பழக்கவழக்க செலவு, மாதக் கடைசியில் மிகப் பெரிய செலவாக அமைந்துவிடும். இத்தகைய சிறிய பணம் நாம் அறியாமல், பொத்தல் உள்ள பாத்திரத்திலிருந்து தண்ணீர் செலவாகுவதைப் போல், மாதக் கடைசியில் பெரிய பணமாக செலவாகுவதை 'காபி விளைவு'(Latte Effect) என்று பெயரிட்டார்.

Thanks: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/45/A_small_cup_of_coffee.JPG/275px-A_small_cup_of_coffee.JPG

உதாரணமாக, நீங்கள் தினமும் வீட்டின் அருகிலுள்ள ஒரு ஓட்டலில்  20 ரூபாய் காபி அருந்துவீர்கள் என்று கணக்கில் கொண்டால்,

ஒரு மாதத்தில் நீங்கள் காபிக்காக செலவழிக்கும் பணம், 20 x 30 = 600 ரூபாய்.
ஒரு வருடத்திற்கு நீங்கள் காபிக்காக செலவழிக்கும் பணம்,600 x 12 = 7200 ரூபாய்.

நீங்கள் இரண்டு வேளை காபி அருந்தினால் ஆகும் செலவு = 7200 x 2 = 14400 ரூபாய்

வருடக் கடைசியில் பார்க்கும் போது, இரண்டு வேளை காபிக்காக மட்டும் நீங்கள் 14400 ரூபாய் செலவு செய்துள்ளீர்கள். இதைத் தான் நாம் 'சிறு துளி பெரு வெள்ளம்' என்று குறிப்பிடுவோம்.

இந்த ஒரு வேளை காபியை நீங்கள் வீட்டில் குடித்தால், உங்களுக்கு ஆகும் செலவு ஒரு காபிக்கு 5 ரூபாய் என்று கணக்கில் கொண்டால்,

ஒரு மாதத்தில் நீங்கள் காபிக்காக செலவழிக்கும் பணம், 5 x 30 = 150 ரூபாய்.
ஒரு வருடத்திற்கு நீங்கள் காபிக்காக செலவழிக்கும் பணம், 150 x 12 = 1800 ரூபாய்.

நீங்கள் இரண்டு வேளை காபி அருந்தினால் ஆகும் செலவு = 1800 x 2 = 3600 ரூபாய்

எனவே, நீங்கள் வீட்டிலேயே காபி குடிப்பதால், சேமிக்கும் பணம்; 14400 - 3600 = 10800 ரூபாய். நீங்கள் ஒரு நாளைக்கு  ஒரு வேளை காபி குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டால், சேமிக்கும் பணம் 7200 ரூபாய் அல்லது 1800 ரூபாய். சிறிதாக நீங்கள் இந்த சேமித்த பணத்தை முதலீடு செய்தால், உங்களுடைய பொருளாதாரம் உயரும்.

இது காபிக்கு மட்டுமல்ல, பல்வேறு சிறிய அன்றாட செலவுகளுக்கும் பொருந்தும். சிலர் காபிக்கு பதிலாக சிகரெட், மினரல் வாட்டர், தெருவோர பஜ்ஜி கடை, லாட்டரி டிக்கெட், பாக்கு, புகையிலை, சஞ்சிகைககள் வகையறாக்களில் அன்றாடம் பணத்தை செலவு செய்வர். உங்களுடைய காபி விளைவு என்ன என்று அறியுங்கள். சிகரெட் போன்ற சில பழக்கங்களால் பணம் தவிர உடல் நலமும் கெடும். இத்தகைய காபி விளைவு செலவை குறைக்க அல்லது தவிர்க்க முடியுமா என்று சிந்தித்து செயல் படுத்துங்கள்.

உங்களுக்கான கேள்வி: உங்களின் காபி விளைவு என்ன?!

 

Monday 3 December 2012

சிக்கன சிந்தனை 5: வரவை விட செலவு குறைவாக இருக்கட்டும்


"Annual income twenty pounds, annual expenditure nineteen [pounds] nineteen [shillings] and six [pence], result happiness. Annual income twenty pounds, annual expenditure twenty pounds ought and six, result misery. - Charles Dickens in David Copperfield novel.

'ஆண்டு வரவு இருபது பவுண்டு, ஆண்டு செலவு பத்தொன்பது பவுண்டு பத்தொன்பது ஷில்லிங், ஆறு பென்ஸ், முடிவு சந்தோஷம்.
ஆண்டு வரவு இருபது பவுண்டு, ஆண்டு செலவு இருபது பவுண்டு ஆறு ஷில்லிங், முடிவு துன்பம்'
- சார்லஸ் டிக்கன்ஸ், டேவிட் காப்பர்ஃபீல்டு புதினத்தில்






Thanks: http://i.telegraph.co.uk/multimedia/archive/02072/PD2655229_2668291-_2072325i.jpg

'வரவை விட செலவு குறைவாக இருக்கட்டும்' என்பது என்ன தெரியாத விஷயமா? என்று நீங்கள் என்னைக் கேட்பது புரிகிறது. ஆனால், இன்றைய சமுதாயத்தில் பலர் மாத சம்பளத்திலிருந்து மாத சம்பளத்திற்கான வாழ்ந்து வருகின்றனர். இதை ஆங்கிலத்தில் 'Paycheck to Paycheck Lifestyle" என்று கூறுவர். இதைத்தான் நாம் தமிழிலும் 'விரலுக்கேத்த வீக்கம் இருக்க வேண்டும்' என்ற பழமொழியில் குறிப்போம். சில குடும்பங்களில், மாதத்தின் கடைசி பத்து நாட்களை மிகவும் கஷ்டப்பட்டு கடப்பர்.

நாம் முன்பே சிந்தித்தவாறு, மாத ஆரம்பத்திலேயே பட்ஜெட் போட்டு, அதாவது செலவுகளைத் திட்டமிட்டு, ஒவ்வொரு செலவையும் வரவு செலவு கணக்கில் வைத்து, சேமிப்பதை வழக்கமாகக் கொண்டால், வாழ்வில் பணத் திண்டாட்டத்திற்கு ஆளாக மாட்டோம். தேவைக்கு போக மிச்சப் பணத்தில், அவசரத் தேவை நிதியை முதலில் சேமித்து தயார் செய்யுங்கள். பின்னர்,ிற பொருட்களை வாங்குங்கள். எந்தப் பொருளையும் வாங்க பணம் செலவழிப்பதற்கு, உங்களிடம் பணம் இல்லையெனில் கடன் வாங்கி வாங்க வேண்டாம். அதற்கான பணத்தை மாதா மாதம் சேமித்து, பின்னர் அந்தப் பொருளை வாங்குங்கள். கடன் அன்பை முறிக்கும் என்பது ண்பர்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வாழ்வின் அமைதியையும் சேர்த்துதான் முறிக்கும். உங்களுடைய வரவுக் கேற்ற செலவுகளை செய்யுங்கள். உங்களால் பைவ்ஸ்டார் ஹோட்டலில் உணவு உண்ணுமளவுக்கு, வரவு இல்லையா, அருகிலுள்ள உணவகத்தில் உண்பதற்கு செலவு செய்யுங்கள். உங்கள் வரவுக்கேற்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். வீடு வாங்குதல், மேல்படிப்பிற்கான கடன், தொழில் ொடங்குவதற்கு என்ற சில காரணங்களை விட, பிற காரணங்களுக்காக கடன் வாங்குவது என்பது தவிர்க்கப் பட வேண்டியது. 


ஏற்கனவே பல கடன்கள் வாங்கியிருந்த, எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் திருமணத்தின் தேனிலவுக்காக, சில லட்சம் செலவில் வெளிநாடு சென்றான். எப்படிடா பணம் என்று கேட்டதற்கு, கடன் வாங்கினேன் என்று கூறினான். எப்படி கடனை அடைப்பாய் என்று கேட்க, இன்னொரு கடன் எடுத்து அதை அடைப்பேன் என்றான்.
த்தகைய வரவுக்கு மீறிய செலவழிக்கும் வாழ்க்கை மிகவும் ஆபத்தானது. கடன் மேல் கடன் வாங்குவது என்பது, ஒருவன் தான் விழுந்துவிட்ட குழியை மேன்மேலும் தோண்டிக் கொள்வதைப் போல ஆபத்தானது. மேல் ஏறி வருவது கடினமாகி விடும்.

நம்முடைய வாழ்க்கையில் இந்தச் சிந்தனையைப் சிந்தித்து பயன்படுத்தி பயனடைவோம்.