Monday 9 March 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - ஈசாப் தங்கமுட்டை வாத்து கதையிலிருந்து, முதலீடுகளை பேராசைப்பட்டு இழக்காமல் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்

ஈசாப்பின் தங்க முட்டையிடும் வாத்து கதையை நாம் அறிந்திருப்பாம். அந்தக் கதையாவது, ஒரு விவசாயி தங்க முட்டையிடும் வாத்து வளர்த்து வந்தான். அந்த வாத்து தினமும் ஒரு தங்க முட்டையிடும். தினமும், அந்த தங்க முட்டையை, விவசாயி விற்று, வெகு சீக்கிரத்தில் அதிக பணம் சேர்த்தான். திடீரென்று, ஒருநாள், பேராசை காரணமாக, தினமும் வரும் ஒரு தங்க முட்டைக்கு பதிலாக, வாத்தைக் கொன்று, எல்லா முட்டைகளையும், ஒரே நாளில் அடையலாம் என்று நினைத்தான். வாத்தைக் கொன்றபோது, அதன் வயிற்றில் இருந்த ஒரே தங்க முட்டையைத் தவிர, வேறு இல்லாததால், பேராசையினால், எதிர்காலத்தில் கிடைக்க இருந்த, தங்க முட்டைகளை இழந்துவிட்டோம் என, எண்ணி வருந்தினான்.

நாமும், இதைப்போல, செய்த முதலீடை நீண்ட நாட்களுக்கு வைத்திருந்தால் மட்டுமே, அதற்கான பலன்கள் நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து உதவி செய்யும். பேராசைப்பட்டு, குறுகிய கால லாபத்திற்கு, முதலீட்டை விற்று பணமாக்க நினைத்தால், அதன் எதிர்கால லாபங்களை நாம் இழந்து விடுவாம்.
உதாரணமாக, உங்களிடம் ஒரு நிறுவனத்தின் பங்கு(Share) உள்ளது என்றால், அந்த பங்கு அவ்வப்போது, ஈவுத் தொகையை (Dividend) வழங்கிக் கொண்டிருக்கும். நிறுவனத்தின் பங்கு உயரும்போது, அவ்வப்போது, கிடைக்கும் ஈவுத் தொகையைவிட, உடனே கிடைக்கும் பங்கு விற்றபணம் அதிகமாக கிடைக்கும் என்று பேராசைப்பட்டு, பங்கை விற்று, பணமாக்கினால், அந்த பங்கின் எதிர்கால லாபங்களை நாம் இழக்க நேரிடும். இந்த உதாரணம், உங்களுடைய வாடகைக்கு விடப்பட்ட வீடு, பரஸ்பர நிதி முதலீடு வகையறா முதலீடுகளுக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment