Wednesday, 28 November 2012

சிக்கன சிந்தனை 4 - அவசர தேவை நிதியை எப்போதும் வைத்திருங்கள்


ன் நண்பன் ஒருவன் அவனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை, அவசரத் தேவை எனப் பணம் கேட்டான். நான் மட்டுமல்லாது மேலும் பலரிடமும் கடன் வாங்கினான். அவன் சிக்கனமான வாழ்க்கை வாழ்பவனல்ல. சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருபவன். அவன் அவசரத் தேவைக்கான நிதி
யை திட்டமிடவில்லை. கடன் அன்பை முறிக்கும் என்று கூறுவதைப் போல, பல நண்பர்கள் பணத்தை திருப்பிக் கேட்டபோது, அவனால் தர இயலாமல், வேறு ஊருக்கு மாற்றலாகி விட்டான். அவனுடைய திட்டமின்மையினால், பொருள் நலத்தையும், நட்பு நலத்தையும் இழந்து விட்டான்.

நாம் ம்முடைய அவசரத் தேவைகளுக்கான நிதியை எப்பொழுதும் தயாராக வைத்திருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் Emergency Fund என்று கூறுவார்கள். நமது வாழ்க்கை திடீரென்று அவசரமாக நமக்குப் பணம் தேவைப்படலாம். உதாரணமாக, வீட்டின் கூரையில் திடீரென்று நீர் கசிவு ஏற்பட்டு உடனே தீர்க்க வேண்டிய நிலைமை வரலாம், வீட்டு நபர் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்படலாம், தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவருக்கு ஆட்குறைப்பினால் வேலை இழக்க நேரிடலாம். அந்த அவசர பணத் தேவை நேரங்களில், அவசர தேவை நிதி கைகொடுக்கும். யாரையும் கையேந்தும் நிலை வராது.



 

அவசர தேவை நிதி என்பது பின்வருமாறு இருக்க வேண்டும். அப்போதுதான், அவசர தேவை நிதியை நாம் இழக்காமல் இருப்ோம், மேலும், அவசரத் தேவைக்கு நமக்கு உதவும்.

  • பணத்தை இழக்க வாய்ப்புள்ள பங்கு சந்தையிலோ அல்லது பரஸ்பர நிதிகளிலோ முதலீடு செய்யப் படக்கூடாது.
  • பணம் நீர்மத் தன்மையுடன்(Liquidity) இருக்கவேண்டும். அதாவது, எப்போது வேண்டுமானாலும் எடுப்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.
  • ன் அட்டை பணம் அல்ல. ஏனென்றால், கடன் அட்டை பணம் உங்களுடைய பணம் அல்ல, எப்போது வேண்டுமானாலும் கடன் அட்டை ரத்து செய்யப்படலாம். கடன் அட்டை பணத்தை உடனே நீங்கள் திரும்செலுத்த வேண்டும். 
  • பணம் சேமிப்பு கணக்கில் இருக்கலாம். அதில் வருகிற குறைந்த வட்டியை பற்றி வருந்த வேண்டாம். ஏனென்றால், அவசர நிதி பணம் நீர்மத் தன்மையுடன் இருக்க வேண்டும். உடனே எடுப்பதற்குத் தோதுவாக, பற்று அட்டை(Debit Card) உதவும்.


சரி சார். எவ்வளவு பணத்தை நான் அவசர நிதியாக வைத்துக் கொள்ளலாம் என்றால், 3 முல் 6 மாதத்திற்கான மாத செலவை நீங்கள் அவசர நிதியாக வைத்திருக்கலாம். துணிச்சலான மனிதர் எனில் 3 மாதமே போதும் என எண்ணலாம். கொஞ்சம் கமான மனிதர் எனில் 6 மாதச் செலவை வைத்திருக்கலாம்.

உதாரணமாக, மாத செலவு 15,000 எனில் 45,000(3 மாத செலவு) அல்லது 90,000(6 மாத செலவு) த்தை அவசர நிதியாக வைத்திருக்கலாம்.

மேலே சொன்ன எல்லா காரணங்களையும் விட, ஒரு முக்கியமாக காரணம் உள்ளது. அது, மன அமைதி. அவசர நிதி உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். பிரச்சனைகளை சந்திக்கும் துணிவைத் தரும்.

1 comment:

  1. தங்கள் பதிவுகள் முழுவதையும்
    படித்து முடித்தேன்
    அனைத்தும் பயனுள்ளவைகளாக இருந்தன
    தொடர வாழ்த்துக்கள்
    (கமெண்ட் பாக்ஸில் வேர்ட் வெரிஃபிகேசனை நீக்கினால்
    பின்னூட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும்)

    ReplyDelete