Saturday, 12 January 2013

சிக்கன சிந்தனை 8: ஓய்வுக்கால அமைதிக்கு பிராவிடண்ட் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்

நமக்கு முந்தைய தலைமுறை மக்கள், அரசாங்க உத்தியோகத்திற்கு அதிக மதிப்பு கொடுத்தனர். பழமொழி 'அரைக்காசு உத்தியோகமானாலும், அரசாங்க உத்தியோகம்' என்பது மிகப்பிரபலம். முதல்வன் படத்தில் கூட, அர்ஜீனின் மாமனார் விஜயகுமார், அரசாங்க உத்தியோகத்துடன் வந்தால், திருமணம் செய்து தருவேன் என்று கூறுவார். கூர்மையாக சிந்தித்தால், அரசாங்க உத்தியோகத்தின் பெருமை, அதனுடைய சம்பளம் மட்டுமல்ல, அதனுடைய ஓய்வூதியமும் தான் என்பதை நாம் உணரலாம். ஓய்வு கால வாழ்க்கையில் பணத்தேவையைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், எல்லோருக்கும் அரசாங்கத்தால் உத்தியோகம் தர இயலாது. எனவே, இன்றைய காலகட்டத்தில், பலர் தனியார் கம்பெனியில் வேலை தேடிக் கொள்கின்றனர். தனியார் கம்பெனிகளில் அரசாங்கத்தைப் போல் ஓய்வூதிய திட்டங்கள் கிடையாது.

ப்ராவிடண்ட் ஃபண்ட்:
இந்திய அரசாங்கம் குடிமக்களின் ஓய்வுகால வாழ்க்கை நலன் கருதி, பிராவிடண்ட் ஃபண்டை 1952ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தனியார் நிறுவனங்கள், பிராவிடண்ட் ஃபண்டில் மாதாமாதம் தனது ஊழியர்களுக்காக முதலீடு செய்கிறது. மேலும், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து, அதே பணம், மாதாமாதம் கழிக்கப்பட்டு, முதலீடு செய்யப்படுகிறது. ப்ராவிடண்ட்
ஃபண்டில் மூன்று வகைகளில் முதலீடு செய்யலாம்.
 
1. ஊழியர்கள் பிராவிடண்ட் ஃபண்ட் (Employee Provident Fund)
2. தன்னார்வ ஊழியர்கள் பிராவிடண்ட் ஃபண்ட்(Voluntary Employee Provident Fund)
3. பொது பிராவிடண்ட் ஃபண்ட்(Public Provident Fund)
  
 
1.ஊழியர்கள் பிராவிடண்ட் ஃபண்ட் (Employee Provident Fund):


 

அடிப்படை சம்பளம்(Basic salary) மற்றும் அகவிலைப்படியில் 12% பணம், ஊழியர்களுடைய சம்பளத்திலிருந்தும், இதற்கு
சமமான நிறுவனம் வழங்கும் பணத்தையும் கூட்டி, அரசாங்கத்துடைய ஊழியர்கள் ப்ராவிடண்ட் ஃபண்டில் முதலீடு
செய்யப்படும்.
 
2.தன்னார்வ ஊழியர்கள் பிராவிடண்ட் ஃபண்ட்(Voluntary Employee Provident Fund):


 

முதல் பகுதியில், கொடுத்தப் பணத்திற்கு அதிகமாக பணத்தை ஊழியர்கள் பிராவிடண்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
இப்போது முதலீடு செய்யும் பணத்திற்கு சமமான பணத்தை, தனியார் நிறுவனம் தராது. இதற்கும் உச்சகட்ட பணம், அடிப்படை
சம்பளம்(Basic salary) மற்றும் அகவிலைப்படியில் 12% பணம்.

3.பொது பிராவிடண்ட் ஃபண்ட்(Public Provident Fund):


 

ஓய்வூதிய சலுகை இல்லாத, பொது மக்கள் பயன் பெறும் வகையில், அரசாங்கம் பொது ப்ராவிடண்ட் ஃபண்ட்
ஏற்படுத்தியுள்ளது. வருடா வருடம், உச்சகட்ட முதலீட்டு பணம் 1,00,000 ரூபாய்.

இவைகளில் முதலீடு செய்வதால், சாதக பாதகங்களாக பின்வருபவைகளைக் கூறலாம்.

சாதகங்கள்:
  • கூட்டு வட்டியில், நீண்ட காலத்தில்(ஓய்வு காலத்தில்) இந்த முதலீடு, பன்மடங்காகப் பெருகி இருக்கும். கூட்டு வட்டியின் மதிப்பைப் பற்றி http://chikkanakurippugal.blogspot.ch/2012/11/blog-post_19.html, நாம் விவாதித்துள்ளோம்.
  • முதலீட்டு பணம், வட்டியோடு திரும்பப் பெறும் போது, அதற்கு வரி கிடையாது. எனவே, மொத்தப் பணம்(அசல்+வட்டி) முழுதாகக் கிடைக்கும்.
  • வருடா வருடம், 80C வரி பிரவின் படி, வருமான வரி சலுகை கிடைக்கும்.
  • நல்ல வட்டி விகிதம் கிடைக்கிறது. பின்வரும் பகுதி, ப்ராவிடண்ட் ஃபண்டின் பல்வேறு காலகட்டங்களின் வட்டி விகிதத்தைக் குறிக்கிறது. Ref: http://en.wikipedia.org/wiki/Public_Provident_Fund
 01.04.1986 to 14.01.2000.............................. 12%
 15.01.2000 to 28.02.2001............................. 11%
 01.03.2001 to 28.02.2002 ............................ 9.5%
 01.03.2002 to 28.02.2003 ............................. 9%
 01.03.2003 to 30.11.2011.............................. 8%
 01.12.2011 to 31.03.2012.............................. 8.6%
 01.04.2012 onwards.................................... 8.80%
  • பணம் பாதுகாப்பான இடத்தில் உள்ளது.
  • ஓய்வு காலத்தில், இந்தப் பணம் பெருவகையில் உதவும்.
பாதகங்கள்:
  • பணம் நீர்ம நிலையில் இருக்காது. தேவைப்படும்போது உடனே எடுக்கமுடியாது.
  • முதலீடு செய்யப்படுகிற பணம், பன்மடங்காக்கும் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படாது. கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும்.
  • வட்டி விகிதம் மாறிக் கொண்டே இருக்கும். குறைந்த வட்டி விகிதத்திற்கு சென்றால், நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.

நமக்கான கேள்வி; நாமும் ப்ராவிடண்ட் ஃபண்டில் முதலீடு செய்து, ஓய்வு காலத்தை சிறப்பாக்கிக் கொள்ளலாமா?

4 comments:

  1. தவிர, வருமான வரி சலுகைகளும் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா. பதிவை திருத்தி விட்டேன்.

      Delete
  2. Good Explanation..

    Thanks

    ReplyDelete

  3. வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

    ReplyDelete