நம்மில் பலருக்கு சேமிப்பிற்கும், முதலீட்டிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாது.
சேமிப்பு: வரவாகும் பணத்தில் செலவை கழிக்க மிச்சமாகும் பணம்.
சேமிப்பு = வரவு - செலவு
இந்த சேமிப்பை என்ன செய்யலாம்?
பணமாக வைத்திருந்து தேவையின் போது செலவழிப்பது:எனக்குத் தெரிந்த ஒரு அம்மா, இவ்வாறு மிச்சமிருக்கும் பணத்தை வீட்டின் பல்வேறு இடங்களில் ஒளிய வைத்து விடுவார். அந்த ஒளிய வைத்த சேமிப்பு பல்வேறு அவசர காலங்களில் உதவியுள்ளது. இந்த முறையில் வைத்த பணம் அவ்வாறே இருக்கும், பணத்தின் மதிப்பு கூடுவதில்லை.பணவீக்கத்தினால், பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்பு உண்டு.
உதாரணமாக, 10,000 ரூபாய் பணத்தை அந்த அம்மா, 2000 வருடம் ஜனவரி 1ம் தேதி வீட்டில் எங்கோ ஒரு இடத்தில் ஒளிய வைக்கிறார் என்று கணக்கில் கொள்வோம். அதனுடைய மதிப்பு, 2013 ஜனவரி மாதம் 1ம் தேதி எவ்வளவு? அதே 10,000 ரூபாய் தான்.
பணத்தை வங்கியில் சேமிப்பு கணக்கில் சேமிப்பது:அந்த அம்மா, ஒளிய வைக்காமல், பணத்தை வங்கி சேமிப்பு கணக்கில் சேர்க்கிறார் என்று கணக்கில் கொள்வோம். ரூபாய் 10,000, 6.5% வட்டி விகிதத்தில்(சராசரி வட்டி விகிதம் http://www.tradingeconomics.com/india/interest-rate) வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டால், அதனுடைய மதிப்பு, 2013 ஜனவரி மாதம் 1ம் தேதி எவ்வளவு?
தனி வட்டியில் மதிப்பு = 17,800 ரூபாய்
கூட்டு வட்டியில் மதிப்பு= 21,290.96 ரூபாய் (வருடா வருடம் கணக்கிடப்படும் கூட்டு வட்டி)
Thanks: http://www.freeimageslive.co.uk/files/images007/saving_money.jpg
பணத்தை முதலீடு செய்வது:அந்த அம்மா, ஒளிய வைக்காமல், பங்கு சந்தை குறியீட்டு எண்ணை அடிப்படையாக கொண்ட குறியீட்டு நிதியில் முதலீடு செய்தால், அதனுடைய மதிப்பு, 2013 ஜனவரி மாதம் 1ம் தேதி எவ்வளவு?
ஜனவரி 1, 2000 பங்கு சந்தை குறியீட்டு எண்: 1482.15
ஜனவரி 1,2013 பங்கு சந்தை குறியீட்டு எண்: 5937
Ref: http://www.nseindia.com/products/content/equities/indices/historical_index_data.htm
கிட்டத்தட்ட 4 மடங்காக பங்குசந்தை குறியீடு பெருகியுள்ளது. எனவே, பணத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 40,000 ரூபாயாக இருக்கும்.
எனவே, சேமிப்பை முதலீடு செய்வதால், பணத்தை பல்மடங்காக்க முடியும். பணத்தைப் பெருக்க, முதலீடுதான் சிறந்த வழி. முதலீடு என்பது பங்குகள், வீட்டு நிலம், அரியப் பொருட்கள் என பல்வேறு வகைகளில் இருக்கலாம். ஆனால், முதலீட்டில் ரிஸ்க் அதாவது இடர்கள் அதிகம். எங்கு முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். தவறான இடத்தில் முதலீடு செய்தால் உள்ள பணத்தையும் இழக்கும் வாய்ப்பு உண்டு. இந்தப் புத்தாண்டில், நாம் நன்றாக சேமித்து, ஆராய்ச்சி செய்து, நல்ல முறையில் பணத்தை முதலீடு செய்து, பணத்தை பல்மடங்காக பெருக்குவோம்.
உங்களுக்கான கேள்வி: முதலீடா? சேமிப்பா? பண்லாமா இல்ல வேணாமா ?
பயனுள்ள பதிவு
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
நன்றி அய்யா . உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Deleteநண்பரே உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம் ...நேரம் இருந்தால் வந்து பாருங்கள் ...நன்றி
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2013/01/2519.html
Valuable and useful information. Keep up the good work.
ReplyDeleteநன்றி. மீண்டும் வருக.
Deleteஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி அய்யா ..
ReplyDeleteநன்றி.
Deleteவலைச்சரத்தின் மூலமாக உங்கள் பதிவிற்கு வந்தேன். உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன். தொடர்கிறேன். நன்றி
ReplyDelete